இலங்கையில் Solar பாவனையாளர்களுக்கு மின்சார சபையின் முக்கிய அறிவித்தல்..!

0
35

மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் பட்சத்தில் வீட்டின் கூரைகளில் உள்ள சூரிய மின்படலங்களை செயலிலிருந்து நீக்குமாறு மின்சார சபை கோரியுள்ளது.

அவ்வாறு குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் பிற்பகல் 3 மணி வரையில் சூரிய மின்படலங்களை செயலிலிருந்து நீக்குமாறு அனைத்து கூரை சூரிய மின்சக்தி படலங்களின் உரிமையாளர்களிடமும் மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மின்சார உற்பத்தியும் நுகர்வும் எல்லா நேரங்களிலும் சமமாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டும் சபை, மின்சாரம் அதிகமாகப் பயன்படுத்தப்படாதபோது மின்சார உற்பத்தியையும் குறைக்க வேண்டும் என்று சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் கூட மின்சாரத் தேவை குறைவதால், அந்த நாட்களிலும் மின்சார விநியோகம் குறைக்கப்பட வேண்டும் என்றும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 10 ஆம் திகதி முதல், நாட்டின் மின்சார தேவை மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளதாகவும், மேலும் 100 கிலோவாட்டிற்கு மேல் உள்ள அனைத்து கூரை சூரிய மின்கலங்களின் விநியோகத்தை தற்காலிகமாக துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here