மின்னல் தாக்கியதில் 38 வயது குடும்பப் பெண் உயிரிழப்பு.!

0
41

மின்னல் தாக்கி நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் (வயது-38) உயிரிழந்தார்.

இந்த சம்பவம், மொனராகலை குடா ஓயா பொலிஸ் பிரிவின் மகாயாய பகுதியில் நேரிய தினம் (20) இடம்பெற்றுள்ளது.

​​குறித்த குடும்பப்பெண் வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் கொட்டும் மழையில் அன்று மாலை 5 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்த நேரம் மின்னல் தாக்கியுள்ளது.

மின்னல் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணமடைந்தார்.