சுண்டிக்குளம் பகுதியில் 108 கிலோ 310 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்படுள்ளார்.
108 கிலோ கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டிருக்கின்றது,
ராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 108 கிலோ கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் நேற்று (24) நடைபெற்றுள்ளது,
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை இதன் போது சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள்.
மீட்கப்பட்ட கஞ்சாவும் சந்தேக நபரும் புதுக்குடியிருப்பு பொலீசாரிடம் சிறப்பு அதிரடிப்படையினரால் ஒப்படைத்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பொலீசார் சட்ட நடவடிக்கை உட்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.