பெற்றோரை மீறி காதல் திருமணம் செய்த மகளுக்கு நேர்ந்த சோகம்..!

0
11

இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிர்புர் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் கிரண் மாங்களே. இவர் ஓய்வு பெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு 24 வயது திருப்தி என்ற மகள் உள்ளார். இவர் புனே மாவட்டத்தில் வசித்து வரும் அவினாஷை காதலித்து வந்தார்.

இந்நிலையில் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் நீண்ட நாட்களாக தனது பெற்றோருடன் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் திருப்தி தனது கணவருடன் ஜல்காவ் மாவட்டத்தில் நடந்த உறவினரது திருமணத்தில் கலந்து கொண்டார். அவருடைய தந்தையும் அந்த திருமணத்திற்கு வந்திருந்தார். அப்போது திருப்தி கணவருடன் இருந்ததை கண்டு கோபமடைந்த கிரண் ஆத்திரத்தில் தனது மகளை கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டார். திருப்தியை காப்பாற்ற முயற்சி செய்த அவரது கணவரையும் சுட்டுக்கொன்றார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் ராணுவ அதிகாரி கிரண் மீது சராமாரி தாக்குதல் நடத்தினர்.

இந்த தகவல் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உயிரிழந்த திருப்தி மற்றும் அவரது கணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த கிரண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், திருப்தி ஒரு எம்பிபிஎஸ் பட்டதாரி. அவிநாஷ் வெறும் 12ம் வகுப்பு முடித்து தொழிலாளியாக இருந்தது தான். கிரண் மங்களே ஓய்வுபெற்ற அதிகாரியாக இருந்ததால், அவருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார். இந்த தற்காலிக கோபத்தில் பயங்கரத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.C