யாழில் இளம் குடும்பப் பெண்ணொருவர் எடுத்த முடிவு.!

0
40

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார்.

இணுவில் கிழக்கு, கொக்கன் வளவு பகுதியைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா என்ற 30 வயது இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்றையதினம் குளிப்பதற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு தனக்கு தானே தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளார்.

மன விரக்தி காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.