புதுக்குடியிருப்பில் தகாத உறவில் இருந்த தாய்.. இரு சிறுமிகளும் வாக்குமூலம்.!

0
130

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் தனது பதின் அகவை மகளின் உறுப்புக்களை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இளம் தாயார் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கடந்த 12.06.2024 அன்று கைது செய்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பாரதி வீதி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் குறித்த தாயார் தனது 13 அகவை சிறமி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை சிறுமியின் மார்பக பகுதியினை தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து 32 அகவையுடைய குறித்த தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இரண்டு சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் வீட்டில் தயார் தகாத உறவுகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது,

வீட்டில் இரவு நேரங்களில் வரும் ஆண்கள் தயாருடன் கட்டிலில் ஒன்றாக உறங்குவதாகவும், தயார் இரவு நேரங்களில் மோட்டார்சைக்கில் மற்றும் கார்களில் இனம் தெரியாத ஆண்களுடன் ஏறி செல்வதாகவும் தெரியவந்துள்ளதுடன், தயார் மது அருந்துவதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்கள்.

13 வயதுடைய சிறுமி வீட்டில் சமைத்து தனது 8 வயது தங்கைக்கும் உணவு கொடுத்துவிட்டே பாடசாலை செல்வதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட தயாரும் தயாரிடம் இருந்த கைத்தொலைபேசி சான்று பொருளாக 13.06.2024 அன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு சிறுமிகளும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளபோது இரண்டு பிள்ளைகளையும் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு அனுப்பி அறிக்கை பெற்று மன்றில் சமர்ப்பிக்கமாறும் கைதுசெய்யப்பட்ட தயார் எதிர்வரும் 25.06.2024 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

தற்போது இரண்டு சிறுமிகளும் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அவர்களின் சித்திகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here