உயிருக்கு போராடியவர்களை மீட்ட சிங்கப்பூர் கப்பல்.. 4 இலங்கை மீனவர்கள் உயிரிழப்பு.!

0
71

கடலில் மிதந்த போத்தலில் இருந்து திரவத்தை அருந்திய நிலையில், சுகவீனமடைந்த டெவோன் 5 படகின் மீனவர்கள் இருவர் வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அந்த படகில் இருந்த 6 மீனவர்களில் 4 பேர் திரவத்தை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சிங்கப்பூர்க் கொடியுடன் பயணித்த வர்த்தகக் கப்பலினால் மீட்கப்பட்ட ஏனைய இரண்டு மீனவர்களும், தற்போது டெவோன் 5 நெடுநாள் மீன்பிடி படகு இருக்கும் இடத்தை நோக்கி செல்லும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான விஜயபாகு கப்பலில் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here