மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு.!

0
83

மொனராகலை பிரதேசத்தில் ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

ஒக்கம்பிட்டியிலிருந்து போகஸ் சந்தி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் காயமடைந்துள்ள நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்துள்ளார்.

ஒக்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரது சடலம் மொனராகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒக்கம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here