நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு..!

0
88

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (14) மாலை இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும், மற்றைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன், வட்டவளை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் தனது மனைவி மற்றும் மூன்று பேருடன் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, கட்டுகஸ்தோட்டை மடவளை வீதியில் மகாவலி கங்கையின் நேற்று (14) இரவு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹந்தகல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here