லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – 25 வயது இளைஞன் உயிரிழப்பு.!

0
86

கொழும்பு – காலி பிரதான வீதியில் தளுவத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (27) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

அளுத்கமையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதே திசையில் பயணித்த பஸ் ஒன்றை முன்னோக்கிச் செல்ல முயன்ற போது லொறி ஒன்னுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை மக்கொணை பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பஸ் சாரதியும் லொறி சாரதியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here