லண்டனில் கத்தி குத்து – சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு.!

0
97

லண்டனில் சவுத்போர்ட் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிறுவர் நடனப் பட்டறையின் போது இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு மேலும் 09 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்தியால் குத்திய 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த கத்திக்குத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது பயங்கரவாதச் செயல் அல்ல என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here