கிளிநொச்சி – இயக்கச்சி சந்தியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

0
71

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்து வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இரவு 10.30 மணியளவில் A9 வீதி கிளிநொச்சி இயக்கச்சி சந்திப்பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நடந்து சென்ற நபர் மதுபோதையில் வீதியின் நடுவே நின்று பேருந்தை மறித்தபோது பேருந்தின் நடத்துநர் மறித்தவரை வீதியை விட்டு விலகி நிற்குமாறு பேசி விட்டு பேருந்தை எடுக்க முற்பட்டபோது. குறித்த நபர் தடக்கி வீழ்ந்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் பரந்தன் பகுதியைச்சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here