இராணுவ லொறி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு.!

0
26

பதுளை – மஹியங்கனை வீதியில் திபிரிகஸ்பிட்டிய பிரதேசத்தில் இன்று காலை தியத்தலாவ இராணுவ முகாமில் இருந்து கண்டி பல்லேகல இராணுவ முகாமிற்கு சென்ற லொறி ஒன்று மஹியங்கனையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாய்வான வீதியில் சென்று கொண்டிருந்த லொறியின் பிரேக் பழுதடைந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here