விமான நிலையத்தில் வைத்து பெண்ணொருவர் கைது.!

0
63

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மின்னணு சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக 262 மின்னணு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் விட்டுச் சென்றபோது, ​​பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண், கொழும்பு தெமட்டகொட பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என்றும்,குறித்த சிகரெட் கையிருப்பின் மதிப்பு மூன்று மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாகவும் பணியக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 7 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here