போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் சென்னையை சேர்ந்தவர் கைது.!

0
52

சுமார் 12.5 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சென்னையில் கையடக்கத் தொலைபேசி விற்பனை வர்த்தகத்தை நடத்தி வரும் 45 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்த 01 கிலோ 40 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here