யாழிலிருந்து முல்லைத்தீவு வந்த பஸ் சாரதி மீது வாள்வெட்டு.!

0
165

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணிகளை ஏற்றி வந்த இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்து சாரதி மீது விசுவமடுப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் சாரதி படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இந் நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பயணிகளை இறக்குவதற்காக பேருந்தை நிறுத்தியபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்தில் பயணித்த பயணிகள் நடு வீதியில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here