கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் – 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு.!

0
125

மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை, துன்போவில பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய டி.கே. ஷிரோமணி ஆவார். இவர் மூன்று குழந்தைகளில் தாயார் ஆவார்.

வெளிநாட்டிலிருந்து சமீபத்தில் நாடு திரும்பிய தனது சகோதரனைப் பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது தென்னை தோப்பு சோவிடா பாலம் அருகே மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பாலத்தின் கரையில் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here