ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான தனது மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.