புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்று (26.02.2025) மாலை குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸாரால் 20 லீற்றர் கசிப்பு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியிலுள்ள குறித்த நபரின் வீட்டிற்கு முன்னால் விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்தோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை இன்றையதினம் (27.02.2025) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது மார்ச் மாதம் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.