கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் பியர் கொள்கலன் ஒன்று இன்று (19) விபத்துக்குள்ளானதை அடுத்து, எஹெலியகொடை மின்னான பகுதியில் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பியர்களை பொதுமக்கள் எடுத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.