யாழில் தோட்டத்துக்குள் கஞ்சா செடி வளர்த்த குடும்பஸ்தர் கைது.!

0
112

யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடியை வளர்த்த, 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் – தைலங்கடவை பகுதியில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 4 அடி 10 அங்குலம் கொண்ட கஞ்சா செடியும் மீட்கப்பட்டது.

சந்தேகநபர் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here