வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக 74 புதிய முறைப்பாடுகள் பெறப்பட்ட நிலையில், மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
மார்ச் 20 முதல் ஏப்ரல் 04 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 608 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மொத்த முறைப்பாடுகளில், தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையம் 71 முறைப்பாடுகளை பெற்றதுடன், அதேவேளை மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையங்கள் 537 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளன.
அனைத்து முறைப்பாடுகளும் சட்ட மீறல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நான்கு வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.