வாக்குவாதம் முற்றியதில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்..!

0
67

மொரகொட பொலிஸ் பிரிவின் மானன்கட்டிய பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக நபரொருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், வாகன விபத்தில் காயமடைந்ததாக கூறி நேற்று திங்கட்கிழமை (07) அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், இது வாகன விபத்து அல்ல எனவும் தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட தாக்குதலின் விளைவினால் உயிரிழந்ததுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் மானன்கட்டிய – மெகொடவெவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவராவார்.

சம்பவதினத்தன்று, அந்தியேட்டி நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பியபோது, உயிரிழந்தவரின் மைத்துனருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 50 மற்றும் 43 வயதுடைய இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மொரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.