கல்முனையிலிருந்து திருகோணமலை சென்ற கார் விபத்து.. உயிர் தப்பிய சாரதி.!

0
12

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

இச்சம்பவம் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

கல்முனையிலிருந்து -திருகோணமலை நோக்கி பயணித்த குறித்த காரில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக காரானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வாய்க்காலினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் தெரிவித்தார்.